திங்கள், 15 மார்ச், 2010

துரோகம்

யாராவது திருடிச் சென்று விடுகின்றனர்..
எனக்கும் மறைத்து வைக்கத்
தெரியவில்லை எதையும்..

காலப்போக்கில்
திருடக் கற்றுக் கொடுத்துவிட்டார்கள்
எனக்கும்..
முதன்முறை திருடிய போது
கையும் களவுமாய் மாட்டிக் கொண்டேன்..

பலரும் திருடியதை
நானே திருடியதாக சொல்லி
தண்டனை விதிக்கப்பட்டது..
என்னெதிரிலிருந்த
என்னிடம் திருடிய
யாரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை..

ஒரு துரோகம் கருவறையிலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக