திங்கள், 15 மார்ச், 2010

சராசரிகளில் ஒருத்தி

குற்றத்தை சுமத்தும் அளவிற்கு
நான் குற்றமற்றவளோ
குற்றத்தை சுமக்கும் அளவிற்கு
நான் குற்றவாளியோ அல்ல..

சரியும் தவறுகளும் உடைய
சராசரிகளில் ஒருத்தி..

திருத்திக் கொள்ளச் சொன்னால்
திருத்திக் கொள்வேன்..
பொறுத்துப் போகச் சொன்னால்
பொறுத்துப் போவேன்..

எனக்கும் உன்னுடைய
கனவுகளைப் போலான
கனவுகள் வந்து போகின்றன..
நீ அடைக்காக்கிறாய்
நான் பொரித்து விடுகிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக