திங்கள், 15 மார்ச், 2010

நம்ப முடியவில்லை

இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டதாக
நம்ப முடியவில்லை..

எனது சொற்களுக்கு இந்த முடிவை
தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லாமல்
போய்விட்டதை ஏற்க முடியவில்லை..

எனது கண்களுக்குள் புகும் ஒளியினை
ஒரு நிழலைப் போல உள்வாங்குகிறேன..

எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும்
ஒரு துளி கண்ணீரைப் புதைத்து செல்கிறேன்..

எதிரே வரும் உனக்கு
தெரிந்திருக்குமா?
இன்றுடன் நானும் முடியப் போகிறேனென..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக