திங்கள், 15 மார்ச், 2010

சிங்கத்தின் கதை

பூங்கா ஒன்றில்
உட்கார்ந்திருந்த போது
‘எனக்கொரு கதை சொல்லு’
என அடம்பிடிக்க
சிங்கத்தின் கதையொன்றை
சொன்னாய்..

விழி விரித்து
இமை கொட்டாமல்
கேட்டுக் கொண்டிருந்தேன்..
உன் குரலின்¢ ஏற்ற இறக்கத்திற்கும்
உன் கையசைவிற்கும்
என் தலை அசைந்தது..

வீடு திரும்பிய பின்
அதைப் பற்றியே யோசித்திருந்தேன்
அன்றிரவு கனவில்
இரண்டு சிங்கங்கள்
என்னை துரத்தி வந்தது..
அதில் ஒன்றிற்கு உன்
முகத்தில் சாயல் இருந்தது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக