திங்கள், 15 மார்ச், 2010

மௌனத்திற்கு கிடைத்த பரிசு

பற்றி எரியும் துயரத்தினூடே
பயணப்படுமென்
மெல்லிய பாதங்களில்
சதைகளே இல்லை..
எலும்பும் எரிந்து
சாம்பல் துகள்கள்
கொட்டிக் கொண்டிருக்கிறது..

அனைத்து உறுப்புகளும்
சாம்பலான பின்னும்
உன் வருகைக்கு வாசலான
கண்களும்
நீ வசித்திருந்த ஒற்றை
இதயமும்
முற்றிலும் எரியாமல்
மீந்து கிடக்கின்றன..

உன் வீட்டில் எடுத்துச்
சென்று பத்திரப்படுத்து..
யாரேனும் கேட்டால் சொல்..
உன் மௌனத்திற்கு கிடைத்த பரிசென்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக