திங்கள், 8 மார்ச், 2010

பிம்பம்

பாசாங்கற்ற புன்னைகையில்
உதிர்ந்தது முதல் பிம்பம்
தோழமையான பேச்சில்
உரிந்தது அடுத்த பிம்பம்
நெருக்கமான இடைவெளிகளை
நிரப்பியது மறு பிம்பம்
இப்படியாக பிம்பங்கள்
ஒவ்வொன்றாய் கழன்று விழ
முடிவில் வெளிப்பட்டது
எந்த சாயலுமற்ற பிம்பம்
அதில் பார்க்க முடிந்தது
எனது பிம்பத்தையும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக