திங்கள், 15 மார்ச், 2010

எந்த காலை இடமாற்ற

ஒரு நள்ளிரவில்
வாழ்க்கையின் ஒளிக்கீற்றுக்குள்
காலடி வைக்க எத்தனிக்கையில்
கதவு தட்டும் ஓசை கேட்டு
திறந்த போது
ஒரு கையில் ஒளிபந்துடனும்
மறுகையில் நிறமிழந்த பூக்களுடனும்
நின்றிருந்தது மரணம்..

வாழ்வின் பாதையிலொன்றும்
மரணத்தின் பாதையிலொன்றுமாய்
வைத்திருந்த கால்களில் ஒன்றை
இடமாற்ற நிர்பந்திக்க படுகிறேன்..
எந்த காலை இடமாற்ற?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக