திங்கள், 15 மார்ச், 2010

சந்தர்ப்பம்

வாழ்விற்கும் மரணத்திற்குமான
போராட்டத்தில்
தொடர்கிறது பயணம்..

சில சமயங்களில்
வாழ்வதற்கான ஈடுபாடும்..
சில சமயங்களில்
மரணித்தினூடான ஆர்வமும்..

நிழலும் ஒளியுமாய்
வந்து போகின்ற
எண்ணங்களின் பிடியிலிருந்து
விலக்கிக் கொள்ள
சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக