திங்கள், 8 மார்ச், 2010

நானுறங்காமல் விடியும் பொழுது

நகர மறுக்கும்
இரவுப் பொழுதுகளில்
ஏதிலியாயிருக்குமென்
உணர்வுகளை
வெகுதொலைவிலிருக்கும்
சிறு நட்சத்திரங்கள்
கண்சிமிட்டி நோக்குகின்றன..

அருகிலிருக்கும்
உன் அசைவுகளை
கண்ணுற்றபடி
சோர்ந்து துவளும்
கண்கள் துயிலுவதில்லை

துயரின் பிடியிலிருந்து
விலகிட முடியாத
மென் சோகத்தின்
புள்ளிகளைச் சுற்றியே
என் நிகழ்தலின் கோலம்
வரையப்பட்டிருக்கிறது

தொட்டுத் தொடரவோ
விட்டு விடவோ கூடாமல்
தனித்தலையும் என் இரவினை
சொட்டு சொட்டாய் கரைக்கிறேன்
நானுறங்காமல் விடியும் பொழுதுகளில்
உன் புன்னகையின் வெளிச்சத்தில்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக