திங்கள், 15 மார்ச், 2010

கல்வாரி மலை

நான் செல்வதற்கு
சிறிய ஒற்றையடிப் பாதைதான் இருந்தது..
மலைமுகட்டிலிருந்து
எந்த பக்கம் திரும்பினாலும்
பயத்தினையளிக்கும் விதமான
சரிவுகளே தென்பட்டன..

வந்த வழியே திரும்பி பார்க்கிறேன்
என் கையிலிருந்து சிந்திய
விதைகள் மரமாகி அடர்ந்திருந்தன..

ஏது செய்வதென்று தெரியாமல்
அந்த ஒற்றையடிப் பாதையில்
செல்கிறேன்.
முள்முடி தரித்த
கருணா மூர்த்தியின் இரத்த சுவடுகள்
காட்சியளித்தன..
சிறிது தூரத்தில் அது
கல்வாரி மலையின் உச்சியை
சென்றடைந்தது..

அங்கே எனக்கென ஒரு சிலுவையும்
முள் முடியும் தரப்பட்டது..
மூன்றாம் நாள் உயிர்த்தெழ மட்டும்
வாய்ப்பின்றி போனது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக