திங்கள், 15 மார்ச், 2010

பாதரசதுளிகள்

மௌனத்திலிருந்து தோற்றுப் போய்
வெளியேறுகிறது என் நிழல்..

அடர்ந்த மௌனம்
பின் தொடர்கிறது..

பாதரசத்துளிகளைப் போல
உருண்டோடும்
கண்ணீர் துளிகளின்
இயக்கம் தாளாமல்
வழித்தடமெங்கும்
சிறு பள்ளங்கள் மேவுகிறது..

இயலாமையின் கூக்குரலை
யார் காதுகளுக்கும்
எட்டாத வண்ணம்
இதயத்தில் குழி தோண்டி
ஆழ புதைக்கிறேன்..

உன்னை நினைத்து விடுகையில்
சட்டென திரளுகிறது
இயலாமையின் பாதரசதுளிகள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக