திங்கள், 15 மார்ச், 2010

என் அழுகுரல்

என்ன முடிவெடுத்துள்ளாய்?
என் மரணத்தின் இளைப்பாறாலாமென்றா?
என் வலியில் துயில் கொள்ளலாமென்றா?

எதுவாயினும்
புன்னகை மாறாமல் ஏற்றுக் கொள்கிறேன்
கொடுப்பது நீயாயிற்றே..

ஆயுள் முழுக்க
என் அழுகுரல்
உன் இதயத்தின் அறைகளில்
ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்
மறுதலிக்க
பயன்பட்ட சொற்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
உனக்கெதிரான ஆயுதமாகி
நள்ளிரவுகளில் நிழலாடும்..

அந்நிழலின் காலடியில்
என் கொலுசின் ஒற்றை மணி
ஆடிக் கொண்டிருக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக