திங்கள், 15 மார்ச், 2010

நட்பு மட்டுமல்ல

உன்னால்
செவிமடுக்கப்படாமல்
ஓய்ந்து கிடக்கிறதென்
சொற்கள்..

காற்றடித்து
தள்ளிப் போகுமதனை
யார் கண்ணும் பட்டுவிடாமல்
பத்திரப்படுத்தி
உன் வீட்டு சாளரத்தின் இடுக்குகளில்
மறைத்து வைத்து திரும்புகிறேன்..

சாளரத்திலிருந்து வெளியேறும்
காற்றிலென் சொற்களின்
வாசனையறிந்து
அந்த நள்ளிரவில்
நீ பதறியெழுந்தால்
உனக்குள்ளிருப்பது
நட்பு மட்டுமல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக