திங்கள், 8 மார்ச், 2010

நிழலில் உறங்கும் வெயில்

முற்றமெங்கும் கொட்டிக் கிடந்தது வெயில்
வீட்டுக்குள் ஒளிந்திருந்தது நிழல்
இரண்டும் அதனதன் எல்லைக் கோட்டில்
ஒன்றையொன்று வெறித்தது
வெயிலுக்கு நிழலில் இளைப்பாறவும்
நிழலுக்கு வெயிலில் காயவும்
ஆர்வம் மேலிட
ஒப்பந்தம் போட்டுக் கொண்டன
பகல் முழுக்க நிழலில் வெயில் உறங்குவதென்றும்
இரவினில் வெயிலில் நிழல் காய்வதென்றும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக