வெள்ளி, 11 ஜூன், 2010

அக்கறை

நீ
மறந்துவிட்டுச் சென்ற
மதிய உணவை
காற்றிடம் கொடுத்தனுப்ப முனைந்தேன்
நகரக் காற்றுக்கு மாசுகளால்
தன்னடை தளர்ந்திருப்பதால்
உன்னைச் சேர தாமதமாகும்..

மேகத்திடம் கொடுத்தனுப்பலாமெனில்
வெயிலுக்கு பயந்து
மலைப்பிரதேசங்களை விட்டு
வெளியே வருவதில்லை மேகம்..

வேறெதுவும் யோசிக்காமல்
சட்டென்று நானே புறப்பட்டு வருகிறேன்
உன்னை உடனே சேர
என்னையின்றி
யாருக்கு அக்கறையிருக்கப் போகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக