சனி, 10 ஜூலை, 2010

கரைகிறது வாழ்வு

குறிஞ்சியில் புணர்தலில்லை
முல்லையில் இருத்தலில்லை
மருதத்தில் ஊடலில்லை
நெய்தலில் இரங்கலில்லை
பாலையில் பிரிதலில்லை..
அன்பின் ஐந்திணைகளும் கடந்து
அதற்கடுத்ததான
கைக்கிளையும்
பெருந்திணையும் கூட
மாறிப்போக
எட்டாம் திணையொன்றை
கண்டறியும் முயற்சியில்
கரைகிறது வாழ்வு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக