வெள்ளி, 11 ஜூன், 2010

வேறு வழி

எங்கு பார்த்தாலும் உன் பிம்பமே..
எதைக் கேட்டாலும் உன் குரலே..
எதைச் செய்தாலும் உன் நினைவே..
எது பேசினாலும் உனைப் பற்றியே..
எந்த நுகர்விலும் உன் வாசமே..
ஐம்புலன்களும் அடங்காமல்
உன்னைச் சுற்றி..
அடக்கும் வழி தெரியாமல்
அல்லாடுகிறேன்..
அத்தனையையும்
நிறுத்திக் கொள்ள
நீ நேசிப்பதைத் தவிர
வேறு வழியேயில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக