வெள்ளி, 11 ஜூன், 2010

யார் கண்ணும் பட்டுவிடாமல்

சிறு ஓவியத்தையொத்த
நமது பயணத்தில்
கண்ணில் தென்பட்ட
அத்தனை வண்ணங்களையும்
குழைத்துப் பூசியிருந்தோம்..

கடலும், வானும் தோற்றுப் போகும்
நீலத்தில் நெருக்கத்தையும்
தும்பையும், நிலவும் பின்வாங்கும்
வெள்ளையில் தூய்மையையும்
குருதியும், ரோஜாவும் வெட்கப்படும்
சிவப்பில் சிந்தனையையும்,
கருவிழியும், இருளும் கண்டறியாத
கருப்பில் இரகசியங்களையும்
கதிரவனும், சூரியகாந்தியும் பார்த்திராத
மஞ்சளில் தெளிவினையும்
புல்வெளியையும், அடர்காடுகளையும்
மிஞ்சும் பச்சையில் விருப்பங்களையும்
சேர்த்து வரைந்த
ஓவியத்தையொத்த காட்சியை
இதுவரை பாதுகாத்து வருகிறோம்..
யார் கண்ணும் பட்டுவிடாமல்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக