வெள்ளி, 11 ஜூன், 2010

நதியினடி

இருளுமென் பூமியைச் சுற்றி
வட்டமிடுகிறதுன் பார்வை..

காடடர்ந்த பகுதியில்
ஒளிந்திருக்குமென் நேசத்தை
தேடியலைகிறதுன்
காலம் தவறிய ஞானம்..

யாருடைய அச்சுறுத்தலுக்கும்
மித மிஞ்சிய அன்பிற்கும்
அடிபணியாத
என் ஆசைகளை
மரக்குகைகளுக்குள்ளும்
நதியினடிக்குள்ளும்
மறைத்திருக்கிறேன்..

நீயும் கூட அறிந்திராத
அப்பாதைப் பரப்புகளை
குறியீடுகளால் விளக்கவும்
செல்லும் வழிகளிலுன்
தாகம் தீர்க்கவும்
நிலப்பரப்பில் விட்டு வந்திருக்கிறேன்..
குருதி கொட்டும் காலடித் தடங்களையும்..
சுரந்தபடியிருக்கும் சில சொற்களையும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக