வெள்ளி, 11 ஜூன், 2010

நகருமென் பொழுதுகள்

சில கனவுகளைச் சொல்லியும், சொல்லாமலும்
சில கவிதைகளை எழுதியும், எழுதாமலும்
சில வார்த்தைகளைப் பகர்ந்தும், பகராமலும்
சில இரவுகளைக் கொடுத்தும், கொடுக்காமலும்
சில கோபங்களைக் காட்டியும், காட்டாமலும்
சில சோகங்களை வெளியிட்டும், வெளியிடாமலும்
சில ரகசியங்களை மறைத்தும், மறைக்காமலும்
சில ஏக்கங்களைக் கூறியும், கூறாமலும்
சில நேரங்களைச் செலவிட்டும், சேமித்தும்
சில வலிகளைத் தாங்கியும், தாங்காமலும்
சில விருப்பங்களை அறிந்தும், அறியாமலும்
நகருமென் பொழுதுகள்
சில சமயங்களில் பிறப்பதும், மரணிப்பதுமாய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக