வெள்ளி, 11 ஜூன், 2010

விழியீர்ப்புவிசை

நான் உளறினேன்
நீ உதறினாய்
நானும் நீயும்
அறிந்திருக்கவில்லை..
அது என் இறுதி சொற்களென..

நான் நெருங்கினேன்..
நீ விலகினாய்..
நானும் நீயும்
அறிந்திருக்கவில்லை..
அது என் இறுதி விருப்பமென..

நான் அழுதேன்..
நீ சிரித்தாய்..
நானும் நீயும்
அறிந்திருக்கவில்லை..
அது என் கடைசிக்
கண்ணீர் துளியென..

நான் ஏதேதோ சொன்னேன்..
நீ எதுவுமே சொல்லவில்லை..
நாம் அறிந்திருக்கவில்லை..
அது நமக்கு கடைசி சந்திப்பென..

நான் நீயாயிருந்தேன்..
நீ நானாகவில்லை..
நாம் அறிந்திருந்தோம்..
நமக்குள்
விழியீர்ப்புவிசை இருப்பதை..

ஏதும் திட்டமிடப்படாத
நம் பயணத்தில்
எல்லாவற்றையும்
திட்டமிட்டிருந்தது
இயற்கை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக