
இரவுகளைத் தின்று
செரித்தவன்
இன்று
இதயத்தைக் கொத்தி உண்கிறான்..
பலமையில்களுக்கு
அப்பாலிருக்கையில்
பொழியப்பட்ட காதலும்
தூவப்பட்ட வார்த்தைகளும்
மூச்சுக்காற்று
உரசிக் கொள்ளும் தூரத்தில்
கனத்த மௌனங்களை
நிரப்பியபடி ..
விதைத்த காதலின்
மொத்தமும்
இவ்வளவு விரைவாக
அறுவடையை
நோக்குமென
எதிர்பார்த்திருக்க
வாய்ப்பில்லை
அவனும் காதலும்
நள்ளிரவில்
அலைபேசியிலிருந்து
கசியும் ஒளியில்
கசிந்து கரைகிறது
நேசமும் நெருக்கமும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக