வியாழன், 4 பிப்ரவரி, 2010

மூன்றாம் நாள்













பேசுகிற வார்த்தைகளுக்கும்
நடைமுறை வாழ்க்கைக்கும்
இருதுருவங்களுக்கிடையேயான
வேறுபாடு..

நேசத்தில் கொடுக்கப்படும்
வாக்குறுதிகள்
கோபத்தில் மறுதலிக்கப்படும்

மூன்றாம் முறையான
மறுதலித்தலில்
காட்டிக் கொடுக்கப்படும்
காதலின் இன்னொரு முகம்..

அது குற்றங்களைப்
பட்டியலிட்டு
பிரிவுச் சிலுவையில்
அறைந்த பிறகே வெளியேறும்..

மூன்றாம் நாள்
உயிர்த்தெழ
சாம்பலிருக்கும்..
அதற்குள்ளே
ஃபீனிக்சின் சிறு இறக்கைகளும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக