வியாழன், 4 பிப்ரவரி, 2010

இந்த நிலம்













யாருக்கும் சொந்தமில்லை
இந்த நிலம்
யாருக்கும் பாரமில்லை
இந்த நிலம்

களைகள், பயிர்கள்
பூச்சிகள், பறவைகள்
யாவையும் தாங்கிய நிலம்
அறுவடை முடிந்து
அமைதியாய்

மழை எப்போதும் வரலாம்
இந்த நிலத்திற்கென
பொழியக் காத்திருக்கும்
மேகத்தின் வரவிற்காக
காத்திருக்குமிந்த நிலம்

விற்றவர்கள் எப்போதும்
பெற்றுக் கொள்ள முடியாது..
பெற்றவர்கள் ஒருபோதும்
விற்க முடியாது..

யாருக்கும் சொந்தமில்லை
இந்த நிலம்
யாருக்கும் பாரமில்லை
இந்த நிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக