வியாழன், 4 பிப்ரவரி, 2010

நட்புகளின் யாசிப்பின்றி










ஒருபோதும்
மதுவை சுவைப்பதில்லை
நட்புகளின் யாசிப்பின்றி..

உனது யாசிப்பினை ஏற்றத்தில்
மிஞ்சியிருக்கிறது..
கசப்பும் புளிப்பும்..

நேற்றிரவு மயக்கத்திலுன்
கை நழுவிய
கண்ணாடிக் கோப்பையின்
சில்லுகளைப்
பொறுக்கி எடுத்தென்
என் கை கிழித்துவிடாமல்..

இன்று உச்சிப் போதில்
வெளியேறிய
உன் வார்த்தை சில்லுகள்
பொறுக்கப்படாமலே
கிழித்து எறிந்திருக்கிறது
காதலின் சில பக்கங்களை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக