வியாழன், 4 பிப்ரவரி, 2010

ஊற்றுக் கண்













மலைமுகடுகளின்
அடியில் கசியும்
அல்லது ஊறும்
நீர் சலசலப்பற்றவை

பெருமலையின் மேலிருந்து
கொட்டும் நீருற்றின் கண்
எங்கோ ஒரு சுனைநீரிலிருந்து
பிறக்கிறது..

ஊற்றுக் கண் தேடியலைந்து
மானின் கண்கள் சோர்வுற்று
நிழலில் ஒதுங்குகிறது..

நிழலோரத்தில்
இலைகள்
மேவிக்கிடந்த நீருற்று
காற்றின் விலக்குதலில்
கண்ணிற்பட்டது..

தாகம் தீர மான் நீரை
உறிஞ்சுகிறது..
ஊற்றிலிருந்து
நீர் புதிய புதிய
இசையோடு வெளிப்படுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக