வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நம்மாலான முயற்சி

கண்ணெதிரே நடக்கும்
கொடுமைகளை
சிமிட்டாது காண பழகிவிட்ட
கண்களை
ஒன்று பிடுங்கியெறி
அல்லது
கொடுமை நடக்கும் இடங்களைக்
காண்பதைத் தவிர்..
அல்லது
கொடுமைகளை
பார்வை நெருப்பாலெறி...

காதுகளில் கேட்கும்
அராஜகங்களை சலிக்காது கேட்க
பழகிவிட்ட காதுகளை
ஒன்று அறுத்தெறி..
அல்லது
அந்த மாதிரியான
விஷயங்களைக் கேட்பதைத் தவிர்..

புலன்கள் உணரும்
அத்துணை தீமைகளையும்
அழித்தொழிக்க முனையும்
நசுக்கிவிடத் துணியும்
சில மனதிற்கு
நம்பிக்கையை விதைப்பதாவது
நம்மாலான முயற்சியாய்
இருக்கட்டும்..

1 கருத்து: