வியாழன், 26 ஆகஸ்ட், 2010

தப்பிய அந்த சொல்

இருசக்கரவாகனத்தில்
மேம்பாலத்தில்
ஏறிக் கொண்டிருக்கையில்
கவிதைக்கான ஒரு சொல்லை
காதுகளில் வழிந்திருந்த
ஒரு பாடலில் இருந்து
பிடித்துக் கொண்டேன்.
அலுவலகம் வந்த பின்பு
நெடுநேரம் கழித்து வந்தது
அந்த சொல்லுக்கான நினைவு..
மீண்டும் மீண்டும்
நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.
அந்த பாடலையும் முணுமுணுக்கிறேன்
உள்ளிருந்து தப்பிய அந்த சொல்
அகப்படவில்லை..
பல பிரயத்தனங்களிலும் சிக்காத
அது ஒருவேளை
என்னைத் தேடியபடியிருக்குமோ
எனும் ஆதங்கம் மேலிட
அனைத்து வேலைகளையும்
அப்படியே விட்டுவிட்டு
இருசக்கரவாகனத்தில் செல்கிறேன்
மேம்பாலம் நோக்கி
காதுகளில் இசை வழிய..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக