செவ்வாய், 28 செப்டம்பர், 2010

மஞ்சள் நிறப் பட்டாம் பூச்சி

கண்ணாடியில் தனது பிம்பத்தையே
கண்டு மிரட்சியடைந்து
ஆக்ரோஷத்துடன் மோதும்
அந்த மஞ்சள் நிறப் பட்டாம் பூச்சியுடன்
பேச வேண்டும் போலிருந்தது..

சில வார்த்தைகள் சொல்ல
பட்டாம்பூச்சி கேட்டுக் கொண்டு
என் தலையணை அருகே அமர்ந்துகொண்டது..
சிறிது நேரம் அதன் வண்ணங்களை
என்மேல் பூசி விளையாடிவிட்டு
உறங்கிப் போனது..
நானும் உறங்கபோகிறேன்..

தூக்கத்திலிருக்கும்
அறைத் தோழிகள்
நாளை புகார் செய்யக்கூடும்
தூக்கத்தில் உளறினேன் என..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக