வியாழன், 12 ஆகஸ்ட், 2010

உன் கண்ணீரில் என் பிம்பங்கள்

கடைசி ஆசை ஏதேனும்
உண்டா? என சாகும் தருவாயில்
கேள்வி கேட்கப்படுகிறது..
சொற்களை இழந்த நான்
என் அசைவுகளில் வெளிப்படுத்துகிறேன்..
உன்னுடன் வாழ வேண்டுமென
மறுதலிக்கத் திராணியற்று
மண்டியிடுகிறாயென் முன்
கண்களில் நீர் வழிய..
உன் கண்ணீரில் என் பிம்பங்கள்
அசைகிறது முடிவுறா காதலைக்
கொண்டாடியபடி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக