வியாழன், 26 ஆகஸ்ட், 2010

ஒரு போர் முடிவுக்கான ஆயத்தத்துடன்

சாப்பிட வாருங்கள்
நண்பர்களே..
எனது செங்குருதியினை
கடுகு தாளித்து பொரியலாகவும்
எனது எலும்புகளை
இஞ்சி பூண்டு தட்டிப் போட்டு சூப்பாகவும்
எனது மூளையினை
சிறிது மிளகு சேர்த்து வறுவலாகவும்
எனது வலுவற்ற தசைகளை
அரிந்து குழம்பாகவும்
இடையிடையே அருந்த
எனது துயர்மிகு நினைவுகளையும்
மேசை மீது வைத்துள்ளேன்.
உங்களில் யாராவது
சோறாக சமைய சம்மதமெனில்
அமரலாம்.
ஒரு போர் முடிவுக்கான
ஆயத்தத்துடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக