வியாழன், 12 ஆகஸ்ட், 2010

நாளை

ஏந்தி நிற்கும் கைகளுக்கு
வெறுமையை அளிக்க
ஒருபோதும் துணியாதே..
அந்தக் கைகள்
நாளை உன்னைக்
காப்பாற்றும் சூழலைக்கூட
பெறலாம்..

பொங்கி நிற்கும்
கண்களுக்கு
தீயிட முனையாதே.
அந்த கண்களே
நாளை உன்னை
வழிநடத்தக் கூடுவதாக
இருக்கலாம்..

நாடிவரும் கால்களுக்கு
மூடிய கதவினைக்
காட்டாதே..
அந்தக் கால்கள்
நாளை உன்னை
சுமந்து செல்ல நேரலாம்..

ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்கும்
மௌனத்தையே
பதிலாய் தராதே..
அந்த வார்த்தைகள்
நாளை உன்னை
இக்கட்டிலிருந்து
காப்பாற்றலாம்.
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக