புதன், 29 செப்டம்பர், 2010

ஒத்திகை

எந்த ஒத்திகையும் பார்க்காமல்
காதலில் நுழைந்தாள்..
நேசமும்
நெருக்கமும்
நம்பிக்கையும்
நேர்மையும் என
அவளிடம் இருந்ததை
காதலுக்கு பரிசளித்தாள்..

இவள் காதலுக்கு
உண்மையானவளா என
காதல் அவளிடம் ஒத்திகை பார்த்தது..
அவளுக்கு எப்போதும்
கண்ணீரை பரிசளிப்பதும்
நம்பிக்கையை சிதைப்பதுமாக
மிக கொடூரமான தண்டனை
கொடுத்து சிரித்தது..
முன்பின் கண்டறியாத
பெரும் சோகமும்
பெருந்துக்கமுமாக
வலியுடன் போராடி
இறுதியில் காதலில் வென்றாள்..

காதல் அவளுக்கு அடிமையானது..
இப்போது ஒத்திகை பார்க்க
விரும்பினாள்..
காதலைக் காலடியில் மிதித்து
ஒரு மரணத்தின் அலறலை ரசித்தபடி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக