செவ்வாய், 28 செப்டம்பர், 2010

காதல் கவிதை

எல்லோரும் விரும்பக்கூடிய ஒரு
கவிதையை எழுதுவது
அவ்வளவு சுலபமானதல்ல..

காதலைச் சொல்லும் கவிதையெனில்
அது வலியைச் சொன்னால்
அதை விட வேறு பிரச்சினை
கண்ணுக்குத் தெரியவில்லையா? என்பார்கள்..
அது சந்தோஷத்தை சொன்னால்
சமூகம் சார்ந்து என்ன சொன்னாய்? என்பார்கள்.

எல்லோரும் விரும்பக்கூடிய ஒரு
காதல் கவிதையை எழுதுவது
அவ்வளவு சுலபமானதல்ல..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக