திங்கள், 29 ஜூன், 2009

கவிதை

எந்த திசையிலிருந்தும்
உதிப்பதுமில்லை
மறைவதுமில்லை
சூரியன்...

எந்த நாளிலும்
தேய்வதுமில்லை
வளர்வதுமில்லை
நிலவு..

எந்த சூழலிலும்
பிறப்பதுமில்லை
இறப்பதுமில்லை
கவிதை...

எங்கும் எதிலும்
எப்போதுமிருக்கிற கவிதை
தன்னை வெளிப்படுத்துகிறது
யாரேனும் அனுமதிக்கையில்..